×

ராசிபுரத்தில் 25 லட்சத்திற்கு பருத்தி விற்பனை

ராசிபுரம்,பிப்.26: ராசிபுரம் கூட்டுறவு சங்கத்தில் 25 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது. ராசிபுரம் அடுத்த கவுண்டம்பாளையத்தில் உள்ள ராசிபுரம் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. ராசிபுரம், சீராப்பள்ளி,  சிங்களாந்தபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1,391  மூட்டை பருத்தியை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனர். இதை கொள்முதல் செய்ய சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டனர். விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர். இதில் ஆர்சிஎச் ரகம் பருத்தி குவிண்டால் அதிகபட்சமாக 5,349க்கும்,  குறைந்தபட்சமாக 4,642க்கும், டிசிஎச் ரகம் பருத்தி குவிண்டால் அதிகபட்சமாக 6,832க்கும், குறைந்தபட்சமாக 5,895க்கும் ஏலம் போனது. ஒட்டு மொத்தமாக விவசாயிகள் கொண்டுவந்த 1,391 மூட்ைட பருத்தி 25 லட்சத்துக்கு ஏலம் போனதாக, கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Rasipuram ,
× RELATED ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து