×

பிளஸ் 2 மாணவிகள் பிரார்த்தனை

அருப்புக்கோட்டை, பிப். 26: அருப்புக்கோட்டை தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வு எழுத உள்ள பிளஸ் 2 மாணவிகளுக்கு வழி அனுப்பும் விழா பள்ளி சார்பில் நடத்தப்பட்டது. உதவி தலைமையாசிரியை காளியம்மாள் வரவேற்றார். பொதுத்தேர்வில் மாணவியர் நன்கு தேர்வு எழுதவும், பள்ளியை விட்டுச்சென்ற பின் வாழ்க்கை ஒளிமயமாக இருக்கவும் அனைவரும் விளக்கு ஏந்தி பிராத்தனை செய்தனர். பைபிள், குரான், கீதை, திருக்குறள், சத்தியசோதனை, தம்மபதம் ஆகியவற்றிலிருந்து ஆசிரியைகள் மாணவிகளுக்கு கருத்துக்களை எடுத்துக் கூறினர்.

அறிவு, உண்மை, ஒழுக்கம், உடல்வளம், நாட்டுப்பற்று, நேர்மை, கருணை ஆகியவற்றை ஆசிரியைகள் மாணவிகளுக்கு எடுத்துக் கூறினர். பள்ளித் தலைமையாசிரியை தவமணி உறுதிமொழி வாசிக்க மாணவிகள் விளக்கு ஏற்றி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். சாலியர் மகாஜன சபை மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் செல்வராஜன், விதை ஆய்வு துணை இயக்குநர் நாச்சியாரம்மாள், பள்ளிச் செயலாளர் கண்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

Tags : girls ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்