பொதுசுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை சார்பில் பெண்களுக்கான நலத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி வளரிளம் பெண்களுக்கு நாப்கின் இலவசமாக வழங்கப்படுகிறது. பிறப்புறுப்பு தொடர்பான நோய்களில் இருந்து தடுக்கவும், மலட்டுத்தன்மை வராமலிருக்கவும் இந்த நலத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இரண்டு மாதத்திற்கு 3 பேக் (ஒரு பாக்கெட்டில் 6 நாப்கின் இருக்கும்) வழங்கப்படும். மேலும் ரத்தஅளவு, உயரம், எடை உள்ளிட்டவை சரிபார்க்கப்படுகிறது.
நிபந்தனைகள்: 10 முதல் 19 வயதிற்குள் உள்ள பூப்பெய்த பெண்களுக்கு மட்டும். இதற்கான அடையாள அட்டை வழங்கப்படும். ஒவ்வொரு மாதமும் அட்டையினை கொண்டு வந்து பதிவு செய்ய வேண்டும். தொடர்பு முகவரி: கிராம சுகாதார செவிலியர், பகுதி சுகாதார செவிலியர், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர், தலைமையாசிரியர், வகுப்பாசிரியர், மாவட்ட கல்வி அலுவலர், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் ஆகியோரை அணுகலாம்.