×

பேன் மருந்து குடித்து மூன்று மாணவிகள் தற்கொலை முயற்சி

சிவகாசி, பிப். 26: திருத்தங்கல்லில் பேன் மருந்து குடித்து 3 மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் மேலரத வீதியைச் சேர்ந்த மாரிமுத்து மகள் மகாலட்சுமி (14). அய்யநாடார் சந்தை சேர்ந்த சித்தநாதன் மகள் முருகேஸ்வரி (14). இருவரும் திருத்தங்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகின்றனர். கடந்த 15ம் தேதி பள்ளி முடிந்த பின்னர், டிபன் பாக்ஸை எடுக்கும்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதைக் கண்ட ஆசிரியர், இருவரையும் பெற்றோரை அழைத்து வரச் சொல்லியுள்ளார். இதேபோல, எம்ஜிஆர் காலனி மலைச்சாமி மகள் மனோசாந்தி (15), திருத்தங்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவரை பெற்றோர் திட்டியதாக தெரிகிறது.

இதனால், மனமுடைந்த மாணவி குடிப்பதற்காக தலையில் தேய்க்கும் பேன் மருந்தை நேற்று பள்ளிக்கு எடுத்து வந்துள்ளார். அங்கு தனது தோழிகளான மகாலட்சுமி, முருகேஸ்வரி ஆகியோரிடம் காண்பித்துள்ளார். அவர்கள் இருவரும் ஆசிரியர் எங்களை பெற்றோரை அழைத்து வரச் சொன்னார். நாங்கள் அழைத்து வரவில்லை. இதனால், எங்களை அவர் திட்டுவார் என தெரிவித்துள்ளனர். நேற்று மதியம் 12 மணியளவில் பேன் மருந்தை மாணவிகள் மூவரும் குடித்துள்ளனர். மாலை 3 மணியளவில் வயிறு வலிப்பதாக சக மாணவிகளிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளனர். உடனே ஆசிரியர்கள் மூவரையும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Tags : girls ,suicide ,
× RELATED ஆம்புலன்சில் பிறந்த இரட்டை பெண் குழந்தைகள் சேத்துப்பட்டு அருகே