×

தரைப்பாலம் கண்டம்: மேம்பாலம் தேவை

திருச்சுழி, பிப். 26: திருச்சுழி அருகே, குச்சம்பட்டிபுதூர் கிராமம் செல்லும் வழியில் குண்டாற்றில் தரைப்பாலம் சேதமடைந்துள்ளதால், மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சுழி அருகே, குச்சம்பட்டிபுதூர் கிராமத்திற்கு செல்லும் வழியில் குண்டாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பாலத்தில் பக்கவாட்டுச் சுவரில் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மழை காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சாலை துண்டிக்கப்படுகிறது.

இதனால், குச்சம்பட்டிபுதூர், சொக்கம்பட்டி, கல்லாம்பிரம்பு, முருகையாபுரம், நொச்சிகுளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்களும் மாணவ, மாணவியர் பல கி.மீ தூரம் நடந்து செல்கின்றனர். தற்போது சேதமடைந்த தரைபாலம் வழியாகத்தான் வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே, தரைப்பாலத்தை அகற்றிவிட்டு, மேம்பாலம் அமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Landline Continent ,
× RELATED நலத்திட்ட உதவிகள் கிடைக்காவிட்டால்...