திருக்கோவிலூர், பிப். 26: திருக்கோவிலூர் கீழையூரில் உள்ள வீரட்டேஸ்வரர் கோயிலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் பெரியாணை கணபதி சன்னதி, பாலசுப்பிரமணியர் சன்னதியில் தரிசனம் மேற்கொண்ட பின் அந்தகார சூரசம்ஹாரமூர்த்தி சன்னதியில் நடந்த சிறப்பு யாக பூஜையில் கலந்துகொண்டார். தொடர்ந்து நவக்கிரக சன்னதி, தட்சிணாமூர்த்தி சன்னதி, சிவானந்த வல்லி அம்மன் சன்னதியில் தரிசனம் மேற்கொண்டார். பின்னர் அவருக்கு சிவாச்சாரியார்கள் தீர்த்த பிரசாதம் வழங்கி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாநில அமைப்பு செயலாளர் சிவராஜ், பிரபு எம்எல்ஏ, தொழிலதிபர்கள் கார்த்திகேயன், சிவக்குமார், பிரபு, முன்னாள் சேர்மன் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் பேரூராட்சி தலைவர் வினாயகமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் சந்திரசேகரன், முருகதாஸ், நகர செயலாளர் இளவரசன், நிர்வாகிகள் டைலர்கள் வேலு, ஏழுமலை, முன்னாள் கவுன்சிலர்கள் ரவிக்குமார், மோகன்ராஜ், ஜெகன்நாத், சண்முகம், வக்கீல்கள் லட்சுமிகுமார், ரஜினிகாந்த், மூர்த்தி, திருமால், ஆண்டனி சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.