×

மா.கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம்

கடலூர், பிப். 26: கடந்த 72 ஆண்டுகளாக சாலை அமைத்து தரப்படாததை கண்டித்து கடலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தென்னம்பாக்கம் ஊராட்சி ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதியில் கடந்த 72 ஆண்டுகளாக சாலை வசதி இல்லை. இதனால் அவசர காலத்திற்கு ஆம்புலன்ஸ் வர முடியாமல் பலர் உயிரிழந்துள்ளனர். பலமுறை மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தென்னம்பாக்கம் ஆதிதிராவிடர் பகுதியில் மலட்டாருக்கு அருகில் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் உள்ள அரசு நிலத்தை மீட்டு சாலை அமைத்து தர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஒன்றிய செயலர் ராஜேஷ்கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆறுமுகம், செயற்குழு உதயகுமார், தட்சணாமூர்த்தி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.  நிர்வாகிகள் எத்திராஜன், குமரன், ஆடல் அரசு, உண்ணாமலை, ஜெயபாலன், பாலு உள்பட திரளானோர் பங்கேற்றனர்.

Tags : MKU ,protest demonstration ,
× RELATED கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது...