×

மதுரை தொழிலாளி துபாயில் மர்மச்சாவு

மதுரை, பிப். 26: துபாயில் வேலை பார்த்த கணவர் மர்மமான முறையில் இறந்துவிட்டதாகவும், உரிய விசாரணை நடத்தி அவரது உடலை மதுரைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனைவி தனது இருமகள்களுடன் டிஆர்விடம் மனு கொடுத்தார். மதுரை ஹார்விபட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார்(35). இவருக்கு முத்தீஸ்வரி என்ற மனைவி, பூமிகா, புவனேஸ்வரி என்ற 2 மகள்கள் உள்ளனர். செந்தில்குமார் கடந்த 2017 ஜூலையில் துபாயில் கூலி வேலைக்கு சென்றார். அங்கிருந்து தினமும் செல்போன் மூலம் தனது மனைவி, மகள்களுடன் பேசி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு திடீரென்று இறந்துவிட்டார் என துபாயில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த முத்தீஸ்வரி, இருமகள்களுடன் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தார். அவர் மாவட்ட வருவாய் அலுவலர் குணாளனிடம் கொடுத்த புகார் மனுவில், ‘‘எனது கணவர் நல்ல திடகாத்திரமாக இருந்தார். அவர் திடீரென்று இறந்ததாக அங்கிருந்து தகவல் கூறுகின்றனர். அவருடைய இறப்பில் மர்மம் உள்ளது. அதனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் முறையாக அவரது உடலை மதுரைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களுக்கு டிஆர்ஓ ஆறுதல் கூறி அனுப்பிவைத்தார்.

Tags : Madurai ,Dubai ,
× RELATED மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயில்...