×

அரசு பெண்கள் பள்ளிக்கு அதிநவீன மின் அலாரம்

வாடிப்பட்டி, பிப்.26: வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு பெட்கிராட் நிறுவனத்தின் சார்பில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மின்அலாரம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வி தலைமை வகித்தார். பெட்கிராட் துணைத்தலைவர் சுருளிஜி முன்னிலை வகித்தார். தமிழாசிரியர் புலவர் வை.சங்கரலிங்கம் வரவேற்றார். பெட்கிராட் நிர்வாக இயக்குநர் சுப்புராம் நவீன மின்அலாரத்தை இயக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய புலவர் சங்கரலிங்கம், நடைபெறவுள்ள பொதுத் தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறும் மாணவிகளை சென்னைக்கு விமானத்தில் அழைத்துச்சென்று முக்கிய இடங்களை காண்பித்துபின் மீண்டும் விமானத்திலேயே மதுரைக்கு அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் சந்திரமோகன் நன்றி கூறினார்.

Tags : state ,girls school ,
× RELATED மக்களவைத் தேர்தல்: கேரள மாநிலம்...