ஏர்வாடி, பிப் 26: ஏர்வாடி பேரூராட்சி பகுதியில் பொதுமக்கள் கூடும் இடங்கள், சாலையோரங்களில் விளம்பர பதாகைகள் வைப்பதற்கு முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளதை பொதுமக்கள் தெரிந்து கொள்ள விழிப்புணர்வு கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் முகைதீன்கான் அலி தலைமை வகித்தார். இளநிலை உதவியாளர் ஷீலா டெய்சி ராணி ஏர்வாடி எஸ்ஐ இம்மானுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தடைசெய்யப்பட்ட ஆணையைப்பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. ஏர்வாடி திமுக நகர செயலாளர் அயுப்கான், ஏர்வாடி சமக நகர செயலாளர் தவசிக்கனி, அதிமுக நைனாமுகமது, பீர்முகமது, யாசர், சேக்முகம்மது, எஸ்டிபிஐ இம்ரான் அலி, மமக பீர்முகம்மது, தமுமுக மாஹின், ஐஎன்டிஜே சித்திக், பக்ருதீன், செஞ்சிலுவை சங்க பிரதிநிதி சபேசன், மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் சமூக ஆர்வலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.