×

வீட்டுமனை பட்டா கேட்டு மனு

நெல்லை, பிப். 26: நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு இலவச வீட்டுமனை பட்டா கோரிக்கைகள் ஏற்கப்படலாம் என கிராம மக்கள் மத்தியில் வதந்தி உள்ளது. இதன் காரணமாக நேற்று நூற்றுக்கணக்கானோர் இலவச வீட்டுமனை பட்டா மனுக்களோடு கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர்.  மாஞ்சோலை நாலுமுக்கு பகுதியை சேர்ந்த பெண்கள், நேற்றும் தாங்கள் வசிக்கும் பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனுக்களோடு வந்திருந்தனர். 4 தலைமுறைகளாக வசித்து வரும் தங்களுக்கு அங்கு வீட்டுமனை பட்டா வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

Tags : housewife ,
× RELATED வருகிற 28ம் தேதி ‘ஜப்பான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா