×

ரயில் நிலையத்தில் புகுந்த மலைப்பாம்பு: பயணிகள் அலறியடித்து ஓட்டம்

சென்னை: தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு பிளாட்பாரம் அருகே மலைப்பாம்பு ஒன்று பதுங்கியிருந்தது. இதை பார்த்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து, கிண்டியில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறை ஊழியர்கள், பாம்பை லாவகமாக பிடித்தனர். அதன்பிறகுதான் அது குட்டி மலைப்பாம்பு என்பது தெரியவந்தது. பின்னர் கிண்டியில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு மலைப்பாம்பை கொண்டு சென்றனர். ரயில் நிலையத்தில் மலைப்பாம்பு புகுந்த சம்பவம் பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Python ,train station ,passengers ,
× RELATED மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே...