×

நெல்லை நீதிமன்றத்தில் வக்கீல்கள் சங்க நூலக கூடுதல் கட்டிட அடிக்கல் நாட்டு விழா

நெல்லை, பிப். 22:  நெல்லை மாவட்ட வக்கீல்கள் சங்க நூலக கூடுதல் கட்டிடத்திற்கு பிரபாகரன் எம்பி அடிக்கல் நாட்டினார்.நெல்லை மாவட்ட வக்கீல்கள் சங்க நூலகத்திற்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு, பிரபாகரன் எம்பி தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்தார். இதற்கான அடிக்கல் நாட்டுவிழா, நெல்லை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்தது. மாவட்ட முதன்மை செசன்சு நீதிபதி ராஜசேகர் தலைமை வகித்தார். சங்க தலைவர் சிவசூரியநாராயணன் வரவேற்றார். பிரபாகரன் எம்பி, கூடுதல் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, வசந்தி முருகேசன் எம்பி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். மாநில அமைப்பு செயலாளர் சுதா பரமசிவம், மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், பாளை. பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, எம்ஜிஆர் மன்ற செயலாளர் பெரியபெருமாள், சிறுபான்மை பிரிவு செயலாளர் காபிரியேல் ஜெபராஜன், அரசு வக்கீல்கள் சிவலிங்கமுத்து, அபுதாகீர், பால்கனி, வக்கீல்கள் மங்களா ஜவஹர்லால், திருமலையப்பன், ஜோதிமுருகன், பெருமாள் பாண்டியன், வெயிலுமுத்து, துணை தலைவர் மந்திரமூர்த்தி, முருக முரளிதரன், சிவசுப்பிரமணியன், செண்பகநாதன், மாரி கிருஷ்ணன், லட்சுமி நாராயணன், முன்னாள் அரசு வக்கீல் பீர்முகைதீன், முத்துக்குட்டி பாண்டியன், பிரபு, பெருமாள், ஜெனி, வெங்கடேஷ், ராஜன், முன்னாள் கவுன்சிலர் அங்கம்மாள், சின்னத்துரை, சேர்மபாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர். சங்க செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Tags : Prosecution ceremony ,Prosecution Service Library ,Nelli Court ,
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி