கும்பகோணம், பிப். 22: கும்பகோணம் நாகேஸ்வரன் வடக்கு வீதியில் ஆசிகா தங்கமாளிகை உள்ளது. தமிழகத்தில் முன்ணனி நகை மாளிகையில் ஆசிகா தங்க மாளிகையும் ஒன்று. இந்நிறுவனம் சார்பில் ஒவ்வொரு பிப்ரவரி 22ம் தேதியும் ஆண்டு விழா நடத்துவது வழக்கம். அதன்படி இந்தாண்டு விழா நிகழ்ச்சிகள் இன்று காலை 9 மணிக்கு துவங்குகிறது. இதைதொடர்ந்து ஆசிகா தங்கமாளிகையின் சிறப்பு விற்பனை தொடர்பான பல்வேறு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் அரசு உயரதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இதுகுறித்து கும்பகோணம் ஆசிகா தங்க மாளிகை நிறுவனர் ஜெகபர் சாதிக் கூறியதாவது: வியாபாரத்தில் பல்வேறு தங்கநகை நிறுவனங்களின் போட்டிகள் உள்ளன. இருந்தபோதும் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் செய்கின்ற சேவை, காலத்திற்கேற்ற நவீன டிசைன்உ ருவாக்குதல், தரமான தங்கத்தை வழங்குதல், சேதார விகிதங்களில் நேர்மையை கடைபிடித்தல் காரணமாக ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் ஆதரவு பெற்ற நிறுவனமாக ஆசிகா தங்கமாளிகை உயர்ந்துள்ளது.இந்நிலையில் 21ம் ஆண்டு விழா இன்று துவங்குவதையொட்டி சிறப்பு விற்பனையில் வாடிக்கையாளர்கள் வாங்கும் தங்க நகைகளுக்கு மிக குறைந்த சேதாரத்தை வழங்குவதுடன், அவர்களுக்கு அறிவுப்பூர்வமான போட்டி வைத்துள்ளோம். அதற்கு பரிசுகளை வழங்கவுள்ளோம் என்றார். ஏற்பாடுகளை கும்பகோணம் ஆசிகா தங்கமாளிகை இயக்குநர்கள், ஊழியர்கள், நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.