×

கந்தர்வகோட்டை அருகே லாரி மோதி பயணியர் நிழற்குடை சேதம்

கந்தர்வகோட்டை,  பிப்.22: கந்தர்வகோட்டை அருகே லாரி மோதியதில் பயணியர் நிழற்குடை சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக ஆட்கள் யாரும் இல்லாத  காரணத்தினால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
 செங்கிப்பட்டியிலிருந்து  கந்தர்வகோட்டை நோக்கி வந்த லாரி கல்லுப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே வந்தது.  அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பஸ் நிறுத்தத்திலிருந்த பயணியர் நிழற்குடை மீது மோதி  நின்றது.
இதில் பயணியர் நிழற்குடை முன்பகுதி இடிந்து சேதமடைந்தது. பயணியர் நிழற்குடையில் ஆட்கள் யாரும் இல்லாததால் உயிரிழப்பு  ஏற்படவில்லை. டிரைவரும் சிறுகாயத்துடன் தப்பினர்.

Tags : Larry Moti ,passenger ,road ,Gandharvat ,
× RELATED லாரி மோதி முன்னாள் திமுக நகர செயலாளர் பலி