×

தொழிலாளியை குத்தியவர் கைது

ஆவடி, பிப்.22: அம்பத்தூர் அடுத்த பாடி, முகப்பேர் சாலையில் வசிப்பவர் கண்ணன் (71). இவர், பழைய இயந்திரங்களை வாங்கி விற்பனை செய்யும் இடைத்தரகராக உள்ளார். இவருடன் பாலா(45) என்பவர் தங்கி கூலி வேலை  செய்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கண்ணன் தனது சூட்கேசில் வைத்திருந்த ₹20ஆயிரம் பணம் மாயமானது. இதில், அவருக்கு பாலா மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பணம் மாயமானது தொடர்பாக இருவருக்குமிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரம் அடைந்த கண்ணன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து பாலாவை சரமாரியாக குத்தியுள்ளார். அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த பாலாவை  கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின் பேரில், அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் வழக்
குப்பதிவு செய்து கண்ணனை நேற்று காலை கைது செய்தனர்.

Tags :
× RELATED ரூ.97 ஆயிரம் பறிமுதல்