×

வீட்டை உடைத்து கொள்ளை

தாம்பரம், பிப்.22:  மேற்கு தாம்பரம், முல்லை நகர், டிஎன்எச்பி காலனியை சேர்ந்தவர் கணேஷ் (31). சென்னை விமான நிலைய அதிகாரி. நேற்று முன்தினம் வேலை முடிந்து கணேஷ், நள்ளிரவில் வீடு திரும்பினார். வீட்டின் கதவை திறந்தபோது, பின்புறம் இருந்து 2 பேர், ஓடுவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.  உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த ரூ50 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை, கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.
புகாரின்படி, தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : house ,
× RELATED வெள்ளை மாளிகை கேட் மீது மோதிய கார் டிரைவர் பலி