×

ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா கால்வாயில் ஆண் சடலம் மீட்பு

ஊத்துக்கோட்டை, பிப்.21: ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா கால்வாயில் ஆண் சடலம் மீட்கப்பட்டது. அவரை யாராவது கொலை செய்து சடலத்தை கால்வாயில் வீசினார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். ஊத்துக்கோட்டை அருகே  ஆந்திரமாநிலம் சத்தியவேடு பகுதி கிருஷ்ணா கால்வாயில் ஆண் சடலம் தண்ணீரில் அடித்து வருவதாக நேற்று அப்பகுதி மக்கள் சத்தியவேடு காவல்நிலையத்துக்கு  தகவல்  கொடுத்தனர்.  அதை போலீசார் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் அந்த சடலம் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டை தாண்டி தொம்பரம்பேடு பகுதிக்கு வந்தது. அது அங்குள்ள உள்ள சிறு பாலத்தில் சிக்கிக்கொண்டது. இது குறித்து ஊத்துக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சப்.இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் சம்பவயிடம் சென்று அப்பகுதி மக்கள் உதவியுடன் சடலத்தை மீட்டனர். சடலமாக மிதந்த நபருக்கு 35 வயது இருக்கும், அந்த வாலிபர் கருப்பு நிற பேண்ட் மற்றும் மஞ்சள், வெள்ளை கட்டம் போட்ட சட்டையும் அணிந்திருந்தார். அவரது வலது கால் வளைந்து காணப்படுவதால் அவர் மாற்றுத்திறனாளியாக இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.சடலத்தை போலீசார் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags : canal ,Krishna ,Uthukkottai ,
× RELATED பாலியல் தொல்லை கொடுத்தாக முன்னாள்...