×

ஓராண்டாக பூட்டிக்கிடக்கும் கழிப்பிடம்

கிருஷ்ணகிரி, பிப்.21: கிருஷ்ணகிரி அடுத்த வெங்கடாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கே.ஏ.நகர் தர்காவிற்கு, பிரதி வெள்ளிக்கிழமை மற்றும் முஸ்லீம்களின் முக்கிய விசேஷ நாட்களில், கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான முஸ்லீம்கள் வருவது வழக்கம். அவ்வாறு வருபவர்களுக்கு கழிப்பிட வசதியில்லாமல் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து, கடந்த 2017-18ம் நிதியாண்டில், கிருஷ்ணகிரி ஒன்றிய பொது நிதியில் இருந்து ₹11 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில், ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே குளியலறை வசதியுடன் கழிப்பிடம் கட்டப்பட்டது. ஆனால், பணிகள் முடிந்து ஓராண்டாகியும், இந்த கழிப்பிடம் பூட்டியே உள்ளது. தற்போது, எனவே, உடனடியாக புதர்களை அகற்றி, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கழிப்பிடத்தை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED சூதாடிய 3 பேர் கைது