×

நலிந்த விளையாட்டு வீரர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

மதுரை, ஜன.21: நலிந்த நிலையில் உள்ள சிறந்த விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி நாளாகும்.
இதுகுறித்து மதுரை மாவட்ட விளையாட்டு அலுவலர் மாலதி வெளியிட்ட அறிக்கை; விளையாட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்று தற்போது நலிந்த நிலையில் முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களாக இருக்க வேண்டும். இவர்களுக்கு ஓய்வூதிய உதவித்தொகையாக மாதம் ரூ.3ஆயிரம் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செயல்படுத்தி வருகிறது. இதற்கான விண்ணப்பங்களை ஆணையத்தின் இணையதளமான www.sdat.tn.gov.in மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

உதவித்தொகையை பெறுவதற்கு சில குறைந்தபட்சத் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. தேசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றிருக்க வேண்டும். முதலிடம், 2ம் மற்றும் 3ம் இடம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கடந்த 2018 ஏப்ரல் முதல் தேதியன்று 50வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இணையதளம் வாயிலான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 21.2.2019 அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். எனவே உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி தேதியாகும்.

Tags : sportsmen ,
× RELATED திருச்சி கே.கே.நகர் ராஜாராம் சாலை...