×

தச்சு தொழிலாளி தற்கொலை

சிதம்பரம், பிப். 21:  சிதம்பரம் அருகே உள்ள சி.கொத்தங்குடி 20 அம்ச நகரை சேர்ந்தவர் ராமன் மகன் ரவி(27). இவர் தச்சு தொழில் செய்து வந்தார். திருமணமாகாத இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் ரவி அதே பகுதியில் இறந்து கிடந்தார். அருகில் மதுபான பாட்டில் மற்றும் எலி பேஸ்ட் கிடந்துள்ளது. தகவல் அறிந்த அண்ணாமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ரவி மதுபானத்தில் எலிபேஸ்டை கலந்து குடித்து இறந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரவியின் சகோதரர் சங்கர் கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Carpenter suicide ,
× RELATED திண்டிவனத்தில் 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்