×

மார்த்தாண்டத்தில் கார் மோதி தச்சுத்தொழிலாளி பலி

மார்த்தாண்டம், பிப். 21: மார்த்தாண்டம் அருகே பம்மம் வலியகாட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் முருகன் (48). தச்சுத்தொழிலாளி. நேற்று அதிகாலை குடிநீர் பிடிக்க பம்மம் மெயின் ரோட்டில் சாலையை கடந்து சென்றுள்ளார். பின்னர் தண்ணீர் எடுத்துக்கொண்டு மீண்டும் சாலையை கடந்துள்ளார். அப்போது நாகர்கோவிலில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி வேகமாக வந்த கார் எதிர்பாராதவிதமாக முருகன் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த முருகன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதைக்கண்டவுடன் டிரைவர் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார்.இது குறித்து அக்கம் பக்கத்தினர் திரண்டு மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரலிங்கம், ஏட்டு செல்லத்துரை மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து ெசன்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் சடலத்தை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முருகனுக்கு சிந்து என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

Tags : car jet carpenter ,
× RELATED குழித்துறை மறைமாவட்ட பொது நிலையினர் அமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவு