×

மார்த்தாண்டம் அருகே இளம்பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு

மார்த்தாண்டம், பிப். 21: அருமனை மேல்பாலை கொட்டாரக்கோணம் பகுதியை சேர்ந்தவர் ஜெபமணி. இவரது மகள் லைலாபாய் (33). இவருக்கும், இடைக்கோடு மடத்துவிளையை சேர்ந்த கீன் என்பவருக்கும் கடந்த 2015ல் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின்போது 17 பவுன் நகை, ரூ.3.5 லட்சம் ரொக்கம், ரூ.1 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். திருமணம் ஆன சில மாதங்களிலேயே கணவன், மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதன்படி கூடுதல் வரதட்சணை வாங்கி வருமாறு கூறி லைலாபாயை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இதற்கு கணவரின் பெற்றோரும் உடந்தையாக இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் கணவர் வீட்டார் அனைத்து நகை, பணத்தை எடுத்துக்கொண்டு, லைலாபாயை வீட்டைவிட்டு அடித்து துரத்தி உள்ளனர்.

வேறுவழியில்லாத அவர் தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார். இதுகுறித்து லைலாபாய் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் லைலாபாயின் கணவர் கீன், அவரது மாமனார் தங்கப்பன், மாமியார் மேரி ஸ்டெல்லா பாய், ெகாழுந்தனார் டீன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் பார்வதி இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : persons ,uncle ,Marthandam ,
× RELATED மார்த்தாண்டம் லாரி பேட்டை முன்...