×

மக்கள் தொடர்பு திட்ட முகாம்

தர்மபுரி, பிப்.20: கெரகோடஅள்ளி மற்றும் ஏலகிரியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் வரும்  27ம் தேதி நடைபெறுகிறது.இதுகுறித்து தர்மபுரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் கெரகோடஅள்ளி தரப்பு மற்றும் கிராமத்தில் வரும் 27ம் தேதி(புதன்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் மலர்விழி தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்  நடைபெற உள்ளது. இதேபோல், நல்லம்பள்ளி அருகே ஏலகிரி கிராமத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரஹமத்துல்லா கான் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் வரும் 27ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறள்ளது.இம்முகாம்களில் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களது துறைகளின் திட்டங்கள் குறித்து விளக்கு கூறுகின்றனர். எனவே, காரிமங்கலம் கெரகோட அள்ளி மற்றும் நல்லம்பள்ளி ஏலகிரி கிராமம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் முகாம்களில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Tags : Public Relations Project Camp ,
× RELATED மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 218...