×

கல்லூரி முதல்வருக்கு கொலை மிரட்டல்

சாத்தூரில் இருந்து சிவகாசி செல்லும் சாலையில், கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் மீனம்பட்டியை சேர்ந்த இரு மாணவிகள் படித்து உள்ளனர். இவர்களின் கல்லூரி கட்டணம் நிலுவையில் இருப்பதால், அவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, ஒரு மாணவியின் சகோதரர் சுரேஷ் என்பவர், கல்லூரி முதல்வர் மாலதியின் அறைக்குள் நுழைந்து இரு மாணவிகளின் சான்றிதழ்களை கேட்டதாகவும், அதற்கு முதல்வர் நிலுவைப்பணம் கட்டினால் மட்டுமே வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இதற்கு சுரேஷ் முதல்வரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. கல்லூரி முதல்வர் புகாரின்பேரில், சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, சுரேஷை கைது செய்தனர்.

Tags :
× RELATED உரம் பயன்பாட்டு திறனை அதிகரிக்கும் உத்திகள்: வேளாண்துறை அட்வைஸ்