×

இன்சூரன்ஸ் கட்டண உயர்வை கண்டித்து ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி, பிப். 20:  திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே சிஐடியூ ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பில் இன்சூரன்ஸ் கட்டண உயர்வை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்டுப்பாடு இல்லாத மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இன்சூரன்ஸ் கட்டணம் உயர்த்துவதை கண்டித்தும், இழப்பீடு தொகை வழங்குவதில் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
 மாவட்ட தலைவர் பக்ருதீன் பாபு தலைமை வகித்தார். ஆட்டோ தொழிலாளர் சங்க மாநில தலைவர் குமார், சிஐடியூ மாவட்ட தலைவர் ரெங்கராஜன், ஆட்டோ மாவட்ட பொதுச்செயலாளர் மணிகண்டன், அமைப்பு செயலாளர் சந்திரன், பொருளாளர் அன்புசெல்வம் உள்பட ஏராளமான ஆட்டோ டிரைவர்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ டிரைவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

Tags : Auto drivers ,insurance tariff hike ,
× RELATED உதகையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கைது..!!