×

தா.பழூரில் 23 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் சந்திப்பு

தா.பழூர், பிப். 20: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அரசு பள்ளியில் முன்னாள் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.அரியலூர் மாவட்டம்  தா.பழூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 23 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முருகானந்தம் தலைமை வகித்தார். முன்னதாக இளமுருகசெல்வன் வரவேற்றார்.  நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஆசிரியர்கள் வீரசோழபுரம் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சதாசிவம், ஓய்வு பெற்ற ஆசிரியர் சிவசண்முகம் உள்ளிட்டோர்   சிறப்புரையாற்றினர்.மேலும் இதில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1995ம் ஆண்டு படித்த தற்போது பல நிலைகளில் வாழும் முன்னாள் மாணவ, மாணவிகளும் 1995ம் ஆண்டு படித்த மாணவ, மாணவிகள் மற்றும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் சந்திப்பு நிகழ்ச்சியில் அவர்கள் தங்கள் நினைவுகளை  பரிமாறிக்கொண்டது அனைவரையும் மிகவும் நெகிழ்ச்சியடைய  செய்தது. முடிவில் ஆசிரியர் ஜோதிநன்றி கூறினார்.

Tags : Alumni teachers ,
× RELATED கலெக்டர் அறிவுரை செந்துறை அரசு...