திருப்புத்தூர், பிப்.20: திருப்புத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் காசிஸ்ரீ பட்டம் பெற்றவர்களின் சிறப்பு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு நான்கு மாதம் பாதயாத்திரையாக நடந்து சென்று காசி விஸ்வநாதர் கோவிலில் காசிஸ்ரீ பட்டம் பெற்று வந்த, காசி க்கள் சந்திப்பு விழா பிள்ளையார்பட்டியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாதயாத்திரை குழுத்தலைவர் காசிஸ்ரீ சோமசந்தரம் தலைமை வகித்தார். பிள்ளையார்பட்டி கோவில் அறங்காவலர்கள் அண்ணாமலை செட்டியார், நாகப்பசெட்டியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுந்தரம் வரவேற்றார். இதில் காசிஸ்ரீ பட்டம் பெற்றவர்களான பழனிக்குமார், சீனிவாசன், முருகப்பன், கணேசன், பாலசுப்பிரமணியன், சிதம்பரம் உள்ளிட்டோர் நடைபயணம் குறித்த அனுபவங்களை பற்றி பகிர்ந்துகொண்டனர்.