×

தோகைமலையில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரத்திற்கு பாத யாத்திரை

தோகைமலை, பிப். 20: தோகைமலையில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு 30ம் ஆண்டாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக சென்றனர். கரூர் மாவட்டம் தோகைமலையில் உள்ள சமயபுரம் பாதயாத்திரை குழு மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் 30ம் ஆண்டு பாதயாத்திரை விழா நடைபெற்றது. நேற்று குருசாமி ராமலிங்கம் தலைமையில் தோகைமலை குறிஞ்சி நகரிலுள்ள பகவதி அம்மன் கோயிலில் இருந்து பாதயாத்திரை புறப்பட்டது.
பின்னர் வெள்ளப்பட்டி மாரியம்மன் கோயிலில் நடந்த பஜனை நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டனர். இங்கு பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. வெள்ளப்பட்டி மாரியம்மன் கோயிலிலிருந்து பாதயாத்திரை குழுவினர் புறப்பட்டனர். இப்பாதயாத்திரையில் தோகைமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : pilgrims ,pilgrimage ,
× RELATED ராகுல்காந்தி யாத்திரை நிறைவு...