×

காவேரிபட்டணம் அருகே தேன் எடுக்க சென்றவர் தவறி விழுந்து பலி

கிருஷ்ணகிரி, பிப்.20: காவேரிபட்டணம் அருகே, எர்ரஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (43). கூலிதொழிலாளியான இவர் கடந்த 17ம் தேதி இரவு, 7 மணியளவில் வீட்டின் அருகே இருந்த மரத்தில் தேனை எடுக்க ஏறியுள்ளார். அப்போது, தேனிக்கள் கலைந்து, கோவிந்தராஜை கொட்டியுள்ளது. இதில் நிலை குலைந்த கோவிந்தராஜ், மரத்திலிருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். பலத்த காயமடைந்த அவரை மீட்டு காவேரிபட்டணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவேரிபட்டணம் போலீசார், கோவிந்தராஜ் உடலைப் பிரேத பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kaveripattana ,
× RELATED காவேரிப்பட்டணம் அருகே தென்பெண்ணை...