×

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பட்டா வழங்கியவர்களுக்கு இதுவரை இடம் இல்லை தமிழ்த்தேசிய கட்சி கண்டனம்

திண்டுக்கல், பிப். 20: திண்டுக்கல்லில் கடந்த 2017ம் ஆண்டு டிச.31ம் தேதி நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏழை, எளிய மக்கள் 164 பேருக்கு இலவச பட்டா வழங்கினார். ஆனால் இதுவரை பட்டா வழங்கியவர்களுக்கு இடம் அளந்து கொடுக்கவில்லை. இதை கண்டித்தும், உடனே இடத்தை அளந்து உரியவர்களுக்கு கொடுக்க வலியுறுத்தியும் திண்டுக்கல் மாவட்ட தமிழ்த்தேசிய கட்சி சார்பில் நேற்று மாநகராட்சி அலுவலகம் அருகே மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை வகிக்க, மாவட்ட தலைவர் ஜோசப் சந்தியாகு வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களான மாநில தலைவர் தமிழ்நேசன், பொதுச் செயலாளர்கள் அப்பாக்கண்ணு, ரகுபதி, முல்லைநாதன் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் பட்டா வழங்கியவர்களுக்கு உடனே இடத்தை அளந்து தரக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : MNR ,PT ,
× RELATED 2021-ல் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில்...