×

கடலில் மூழ்கி வாலிபர் பலி

வேளச்சேரி, பிப். 20: திருச்சி அடுத்த உறையூரை சேர்ந்தவர் ஜெகநாதன் (29). சென்னை ராமாபுரத்தில் வாடகை வீட்டில் தங்கி, போரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.இந்நிலையில், நேற்று மாலை ஜெகநாதன், தனது நண்பர்களுடன், சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடலில் குளித்தார். அப்போது, ஏற்பட்ட ராட்சத அலை அவரை இழுத்துச் சென்றது. இதை பார்த்த மீனவர்கள், கடலில் குதித்து  ஜெகநாதனை தேடினர். சிறிது நேரத்தில்ஜெகநாதன் உடல் கரை ஒதுங்கியது.தகவலறிந்து சாஸ்திரி நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

Tags : sea ,
× RELATED அந்தமான் கடலில் ருத்லேண்ட் தீவு அருகே...