×

நசரத்பேட்டையில் நடக்கும் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

திருவள்ளூர், பிப். 20: பூந்தமல்லி ஒன்றியம், கொரட்டூர் ஊராட்சி புதுச்சத்திரத்தில் இன்று காலை 8 மணி அளவில் திமுகவின் ஊராட்சி சபை கூட்டம் நடக்கிறது. தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி நாசர் தலைமை தாங்குகிறார்.  பூந்தமல்லி மேற்கு ஒன்றிய செயலாளர்  கொத்தியம்பாக்கம் டி.தேசிங்கு, செங்கல்வராயன் ஆகியோர்  வரவேற்கின்றனர். இந்த ஊராட்சி சபாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களின் கேள்விகளுக்கு  பதில் அளித்து பேசுகிறார்.
அதைத்தொடர்ந்து பூவிருந்தவல்லி ஒன்றியம் நசரத்பேட்டையில் இன்று காலை 9 மணி அளவில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆய்வுக் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி நாசர்  தலைமை வகிக்கிறார்.  பூந்தமல்லி கிழக்கு ஒன்றிய செயலாளர் பூவை எம்.ஜெயக்குமார் வரவேற்கிறார்.  ஒன்றிய, நகர செயலாளர்கள்   டி.தேசிங்கு, எம்.ரவிக்குமார், புஜ்ஜி டி.ராமகிருஷ்ணன், ஆர்.ஜெயசீலன், தி.வே.முனுசாமி  ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு வாக்குச்சாவடி முகவர்களிடம் ஆய்வு மேற்கொள்கிறார்.  வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. ஆ.கிருஷ்ணசாமி, மாநில, மாவட்ட நிர்வாகிகள்  இ.பரந்தாமன்,   பூவை சி.ஜெரால்டு, ஆர்.டி.இ.ஆதிசேஷன், கே.திராவிடபக்தன், கே.ஜெ.ரமேஷ், கா.பார்த்தசாரதி, காயத்ரிஸ்ரீதரன், மு.ராஜேந்திரன், மா.இராஜி, ஜி.ஆர்.திருமலை, ஜெ.ஜெய்மதன், கே.யு.சிவசங்கரி மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள்   ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள், முடிவில், நசரத்பேட்டை சங்கர் நன்றி கூறுகிறார்.

Tags : MK Stalin ,polling agents meeting ,Nasaratpattu ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...