×

பிஏபி வாய்க்காலில் வெட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம்

பொள்ளாச்சி, பிப். 15: பொள்ளாச்சியை அடுத்த செம்மேடு வழியாக செல்லும் பிஏபி வாய்க்காலில் நேற்று காலையில், சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்து வந்தது. இதை கண்ட அப்பகுதியினர், ஆனைமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த போலீசார், பிஏபி வாய்க்காலில் ஒதுங்கியை சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது அவரது கழுத்து, முகப்பகுதி, காது மற்றும் உடலின் பல்வேறு இடங்களில், அரிவாள் போன்ற ஆயுதத்தால் வெட்டப்பட்டு முகம் சிதைந்த நிலையில் இருப்பதையறிந்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பின், சடலத்தை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.பிஏபி வாய்க்கால் தண்ணீரில் பிணமாக மிதந்து வந்த நபரின் உடலில் ஆங்காங்கே அரிவாளை கொண்டு வெட்டுபட்டது போல் ஆழமாக பதிந்திருந்ததால், சில நாட்களுக்கு முன்பு அந்த நபரை யாரோ கொலை செய்து, பிஏபி வாய்க்காலில் வந்த தண்ணீரில் வீசிச்சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் இறந்த நபர் யார், எந்த ஊரை சேந்தவர் என்று தெரியவில்லை. இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : PAP ,canal ,
× RELATED பிஏபி முதலாம் மண்டல பாசன கால்வாயில்...