×

தொலைதொடர்பு ஊழியர்கள் வேலைநிறுத்த விளக்க கூட்டம்

தர்மபுரி, பிப்.15: தர்மபுரி தொலைதொடர்பு ஊழியர்கள், அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு சார்பில், வேலைநிறுத்த விளக்க கூட்டம், தர்மபுரி தொலைபேசி நிலைய மனமகிழ் மன்றத்தில் நடந்தது. கூட்டமைப்பு தலைவர் மகேஷ்குமார் தலைமை வகித்தார். கன்வினர் கிருஷ்ணன் வரவேற்றார். பிஎஸ்என்எல் சங்க நிர்வாகிகள் தமிழ்மணி, சென்னகேசவன், ராமசுந்தரம்ம ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். கூட்டத்தில், தொலைதொடர்பு பொதுத்துறையை நலிவடைந்த துறை என்றும், விரைவில் மூடுவிழா நடத்தப்படும் என்ற செய்தி உண்மை இல்லை. தொலைதொடர்பு ஊழியர்கள், அதிகாரிகளுக்கு 3வது ஊதிய மாற்றத்தை உடனே வழங்க வேண்டும். தொலைதொடர்பு நிறுவனத்திடமிருந்து ஓய்வூதிய பங்கீடு பெறுவதில், மத்திய அரசு உத்தரவை அமல்படுத்த வேண்டும். தொலை தொடர்புதுறைக்கு 4ஜி, ஸ்பெக்ட்ரம் உடனே வழங்க வேண்டும். ஓய்வூதியதாரர்களுக்கு, ஓய்வூதிய மாற்றத்தை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 18ம் தேதி 19, 20 ஆகிய 3நாட்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்குவது என முடிவு செய்யப்பட்டது.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா