×

தர ஊதியம் வழங்க கோரி சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாகை, பிப். 15: தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் சாலைப் பணியாளர்கள் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்து ஆணை வழங்க வேண்டும், சாலை பணியாளர்களுக்கு தொழில்நுட்பட கல்வித் திறன் பெறா ஊழியர்களுக்கான ஊதியம், தர ஊதியம் வழங்க வேண்டும், சாலைப் பணியாளர்களுக்கு நிரந்தர ஊதிய தொகுப்பில் மாத ஊதியம் வழங்க வேண்டும், பணி நீக்க காலத்தில் இறந்த பணியாளர்கள் வாரிசுகளுக்கு விதிமுறைகளை தளர்த்தி பணி வழங்கவேண்டும்.
சாலை பராமரிப்பு பணியை தனியாருக்கு கொடுப்பதை கைவிட்டு அரசே ஏற்று நடத்த வேண்டும் என வலியுறுத்தி நாகை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன் கருப்பு கொடி ஏந்தி மாவட்ட தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் நாகை மாவட்ட செயலாளர் உதயக்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுரளி, மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், நாகை வட்ட தலைவர் தமிழ்செல்வம், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.    


Tags : Demonstrators ,
× RELATED புகுஷிமா அணு உலை விபத்து: ஜப்பான்...