×

கே.வி.குப்பம் அருகே தந்தை கண்முன்னே விபத்தில் மகள் பலி

கே.வி.குப்பம், பிப்.15: கே.வி.குப்பம் அடுத்த ஆலங்கநேரி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர்(45) முன்னாள் ராணுவ வீரர். இவரது மகள் பார்கவி(18). இவர் வாணியம்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். பார்கவி கல்லூரிக்கு செல்வதற்காக அவரது தந்தை தினமும் பைக்கில் பள்ளிக்கொண்டா பஸ் நிறுத்தத்திற்கு அழைத்து சென்று விடுவது வழக்கம். இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல் சங்கர் தனது மகள் பார்கவியை பைக்கில் அழைத்து கொண்டு பசுமாத்தூர் அடுத்த ஐதர்புரம் சாலையில் சென்ற போது முன்னாள் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்ற போது நிலை தடுமாறிய இருவரும் கீழே விழுந்தனர்.அப்போது, லாரி சக்கரத்தில் சிக்கி பார்கவி சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த கே.வி.குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், விபத்தை குறித்து கே.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை கண் முன்னே மகள் துடிதுடித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags : KV Kuppam ,
× RELATED ரம்ஜான் நெருங்கும் நிலையில்...