×

சண்டையை படம் பிடித்ததால் ஆத்திரம் போலீஸ்காரரை தாக்கி செல்போன் உடைப்பு: கானத்தூரில் பரபரப்பு

துரைப்பாக்கம், பிப். 15: சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூரை சேர்ந்தவர்கள் சிவா (25), அன்பரசன் (24). இவர்கள் இருவருக்கும் இடையே நேற்று முன்தினம் திடீரென வாய் தகராறு ஏற்பட்டது. இவர்களுக்குள் மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டதால், அக்கம் பக்கத்தினர் இதுபற்றி கானத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.அதன்பேரில், ஏட்டு முருகராஜ் சம்பவ இடத்துக்கு சென்று, இரு தரப்பையும் சமாதானம் செய்து, கலைந்து செல்லும்படி கூறினார். ஆனாலும், அவர்கள் சண்டை தொடர்ந்தது. இதையடுத்து ஏட்டு முருகராஜ், அங்கு நடந்த காட்சிகளை ஆதாரத்திற்காக தனது செல்போனில் படம் பிடித்தார்.இதை பார்த்து ஆத்திரமடைந்த இருதரப்பினரும், முருகராஜிடம் தகராறில் ஈடுபட்டு, அவரது செல்போனை பறித்து உடைத்தனர். இதை தட்டிக்கேட்ட அவரையும் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.

இதுகுறித்து கானத்தூர் போலீசில், ஏட்டு முருகராஜ் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரிக்கின்றனர். கடந்த வாரம் இதே பகுதியில் நடந்த தகராறின்போது, ரோந்து வானத்தில் சென்ற இன்ஸ்பெக்டர் கார் மீது ஒரு கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. கானத்தூர் பகுதியில் போலீசார் தாக்கப்படுவதோடு, வாகனங்களும் உடைக்கப்படும் சம்பவம் சக போலீசார் மத்தியில் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

Tags : firing ,policeman ,
× RELATED டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது...