×

சேந்தமங்கலம் அருகே விவசாய நிலத்தில்

திடீர் தீ விபத்துசேந்தமங்கலம், பிப்.14: சேந்தமங்கலத்தில் அருகே, வையணை பகுதியைச் சேர்ந்த விவசாயி வைத்தி(52). இவருக்கு சொந்தமான தோட்டத்தில் கோரைப்புல் வளர்த்து வருகிறார். தற்போது வறட்சி காலம் என்பதால், புற்கள் காய்ந்து சருகுபோல் உள்ளது. அப்பகுதியில் ஓட்டல் கடையில் பயன்படுத்தப்பட்ட அடுப்பு சாம்பலை, யாரோ ஒருவர் விவசாய நிலம் அருகே கொட்டி விட்டு சென்றுவிட்டார். அதிலிருந்த நெருப்பு பொறி பறந்து, கோரைத் தோட்டத்தில் விழுந்தது. இதையடுத்து விவசாய தோட்டம் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்த தகவலின் பேரில், நாமக்கல் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து, சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து ஏற்பட்ட நிலத்தின் அருகே மாட்டு கொட்டகை உள்ளது. அங்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டதால், மாடுகள் உயிர் தப்பின.

Tags : land ,Senthamangalam ,
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!