×

ராசிபுரத்தில் மனுநீதி முகாம்

ராசிபுரம், பிப்.14: ராசிபுரத்தில் நடந்த மனு நீதி நாள் முகாமில், கலெக்டர் ஆசியாமரியம் கலந்து கொண்டு பேசினார்.ராசிபுரம் அருகே வெண்ணந்தூரில், மனுநீதி முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கலெக்டர் ஆசியா மரியம், 46 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா, 30 பேருக்கு முதியோர் உதவிதொகை உள்பட 106 பயனாளிகளுக்கு ₹30 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அவர் பேசுகையில், ‘பெண் குழந்தைகளை பாதுகாக்கவேண்டும். கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என தெரிந்துகொள்வது சட்டப்படி குற்றம். நாமக்கல் மாவட்டத்தில் எந்த மருத்துவமனையிலும் இதுபோன்று நடைபெறவில்லை. ஏற்கனவே இதுபோன்று பாலினத்தை கூறிய மருத்துமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது,’ என்றார். கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முண்டியடித்து கொண்டு வந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து, போலீசார் கூட்டத்தை சரி செய்தனர்.  

Tags : Manipur ,camp ,Rasipuram ,
× RELATED மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள...