தர்மபுரி, பிப்.14: தர்மபுரி கல்வி மாவட்ட அளவில் நடந்த உலகத்திறனாய்வு தடகள போட்டியில், ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், உலகத்திறனாய்வு தடகள போட்டி, நேற்று மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்தது. போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். 100மீ, 200மீ, 400மீ, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகளில், 6, 7, 8ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டார் பங்கேற்றனர். கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மண்டல போட்டிக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். மண்டல போட்டிகளில் 7 கல்வி மாவட்ட அளவில் தேர்வு போட்டிகள் நடைபெற்று, நிர்ணயிக்கப்பட்ட அளவீட்டினை பெற்றவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மாநில அளவிலான ஸ்பிரின்ட்ஸ் அன்டு ஜம்ப்ஸ் அகாடமி, மிடில் டிஸ்டன்ஸ் அகாடமி, லாங் டிஸ்டன்ஸ் அகாடமி, த்ரோஸ் அகாடமி, புட்பால் அகாடமி, ஹாக்கி அகாடமி, டைவிங் அகாடமி ஆகிய சிறப்பு அகாடமிக்கு, 1 முதல் 10 இடங்களை பெற்ற வீரர்வீராங்கனைகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.