×

பள்ளியில் உடற்திறன்போட்டி வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு

தா.பேட்டை, பிப்.14: தா.பேட்டை அடுத்த காருகுடி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த உடற்திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.தா.பேட்டை அடுத்த சேருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் உடல்திறன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமையாசிரியர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் சச்சிதானந்தம், முன்னாள் ஊராட்சி தலைவர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை யோகலட்சுமி வரவேற்றார். ஓட்டப் பந்தயம், குண்டு எறிதல், தட்டு எறிதல், ஈட்டி எறிதல், கைப்பந்து உள்ளிட்ட பல்வேறு உடல்திறன் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியை சித்ரகலா நன்றி கூறினார்.

Tags : school ,winner ,
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி