புதுக்கோட்டை, பிப். 14: புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் ஆண்டு விளையாட்டு போட்டிகள் நடந்தன. விளையாட்டு போட்டிகளை கல்லூரி முதல்வர் சுகந்தி துவக்கி வைத்தார். விளையாட்டுத்துறை தலைவர் நாகேஸ்வரன் வரவேற்றார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட உடற்கல்வி இன்ஸ்பெக்டர் தங்கராஜ் பரிசு வழங்கினார். ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வி இயக்குநர் ஜான்பார்த்திபன், உடற்பயிற்சி பயிற்றுனர்கள், கல்லூரி பேராசிரியர்கள் செய்திருந்தனர்.