குலசேகரம்,பிப்.14: திருவட்டாரையடுத்துள்ள பூவன்கோடு பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ் (62). தனியார் கல்லூரி காவலாளியாக உள்ளார். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டிற்கு அருகிலுள்ள புளியமரத்தில் புளி பறிப்பதற்காக ஏறியுள்ளார். அப்போது மரத்திலிருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தவரை உறவினர்கள் மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் தர்மராஜ் இறந்தார். இதுகுறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.