×

வெள்ளியணை அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

கரூர்,பிப்.13:  கரூர் மாவட்டம் வெள்ளியணை அடுத்துள்ள முஷ்டகிணத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜூ(35). இவர், கரூரில் உள்ள ஒரு பஸ் பாடி நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வந்தார். கடந்த 10ம் தேதி மதியம், மணவாசியில் உள்ள நண்பர் வீட்டு கிடா விருந்தில் கலந்து கொண்ட ராஜூ, இரவு பைக்கில் வீடுக்கு சென்றார். இவர் கரூர் மாவட்டம் வெள்ளியணை அடுத்துள்ள கருவாட்டியூர் அருகே சென்ற போது, எதிர்பாராத விதமாக பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில், படுகாயமடை அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து சம்பவம் குறித்து வெள்ளியணை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : villain ,
× RELATED திரைப்பட வளர்ச்சிக் கழக பொறுப்பு: பார்வதியை நீக்கியது கேரள அரசு