×

சீர்காழி நகரில் 48 இடங்களில் சிசிடிவி காமிரா குற்றசெயல்களில் ஈடுபடுவோர் விரைவில் பிடிபடுவர் நாகை எஸ்.பி. தகவல்

சீர்காழி, பிப்.13: சீர்காழி நகரில் 48 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் விரைவில் படிபடுவர் என்று எஸ்பி
விஜயகுமார் தெரிவித்தார்.
சீர்காழியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையிலும், சட்டம் ஒழுங்கை தீவிரமாக கண்காணிக்கவும் சீர்காழி காவல் உட்கோட்டம் சார்பில் சட்டநாதபுரம் ரவுண்டானா, தென்பாதி, புதிய, பழைய பேருந்து நிலையம், கடைவீதி, பிடாரி வடக்குவீதி, கொள்ளிட முக்கூட்டு உள்ளிட்ட 48 இடங்களில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் நவீன கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் கட்டுப்பாட்டு அறை சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனிஅறை அமைக்கப்பட்டு செயல் படுத்தப்பட்டு வருகின்றன.  இந்நிலையில் சீர்காழி காவல் நிலையத்திற்கு வருகை தந்த நாகப்பட்டினம் எஸ்.பி விஜயக்குமார், கண்காணிப்பு காமிராக்கள் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது
அவர் கூறுகையில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் குற்ற செயல்களை தடுத்திட கண்காணிப்பு காமிராக்கள் மூலம் போலீசார் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் எளிதில் பிடிபடுவர் என்றார்.
ஆய்வின்போது சீர்காழி இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு உடனிருந்தார்.

Tags : locations ,Sirkali City ,Nagai SB ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் ORS...