×

தாய் இறப்புக்கு நிவாரணம் கோரி மரத்தில் ஏறி மகன் போராட்டம் வேதாரண்யத்தில் பரபரப்பு

வேதாரண்யம், பிப்.13: வேதாரண்யத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டு தனது தாயார் உயிரிழந்த நிலையில் இதுவரை நிவாரணம் வழங்கப்படாததை கண்டித்து இளைஞர் ஒருவர் பனை மரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.
தோப்புத்துறை பனையங்காடு பகுதியை சேர்ந்த தருமன் மனைவி அலவேலு அம்மாள் இவர் கஜா புயலில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது இறப்புக்கு இதுவரை அரசின் நிவாரணம் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக அவரது மகன் ராமச்சந்திரன் பலமுறை அரசு அலுவலர்களை அணுகியும் எந்த பயனும் இல்லை. இந்நிலையில் தனது தாயாரின் இறப்புக்கு நிவாரணம் வழங்கப்படாததை கண்டித்து அப்பகுதியில் உள்ள பனைமரம் ஒன்றில் ஏறி அதன் உச்சிக்கு சென்று ராமச்சந்திரன் போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்து வந்த வேதாரண்யம் போலீசார் அவரை மீட்டு தாசில்தார் அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். அவரிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தாசில்ர் மீண்டும் மனு அளிக்குமாறு அறிவுறுத்தி வீட்டிற்கு
அனுப்பி வைத்தனர்.

Tags : veteran ,death ,
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...