×

மசாஜ் சென்டரில் விபசாரம் 2 பேர் மீட்பு; பெண் கைது

கோவை, பிப்.13 : கோவை புதூரில் உள்ள பிளசன்ட் வியூ லே-அவுட்டில் மசாஜ் சென்டர் ஒன்று செயல் பட்டு வந்தது. வாலிபர்கள், கல்லூரி மாணவர்கள் அடிக்கடி வந்து சென்றதாக கூறப்படுகிறது. அங்கு விபசாரம் நடப்பதாக தகவலறிந்த குனியமுத்தூர் போலீசார் மாறுவேடத்தில் நேற்று முன் தினம் இரவு அப்பகுதியை நோட்டமிட்டனர். போலீசார் ஒருவர் வாடிக்கையாளர் போல் உள்ளே நுழைந்து கண்காணித்தார்.
அப்போது அங்கு பெண்களை வைத்து விபசாரம் நடந்தது கண்டு பிடிக்க பட்டது. இதையடுத்து மசாஜ் சென்டர் உரிமையாளர் செல்வபுரம் ராஜூ வீதியை சேர்ந்த மகேந்திரன் மனைவி தேவி(53) என்பவரை போலீசார் கைது செய்தனர். அங்கு இருந்த பெங்களூரை சேர்ந்த காஞ்சனா ஜாஸ்மின்(30), மாகி(30), ஆகியோரை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், கடந்த சில மாதங்களாக ரூ.12 ஆயிரம் வாடகை கொடுத்து மசாஜ் சென்டரை தேவி நடத்தி வந்தது தெரிய வந்தது.


Tags : persons ,massacre center ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...