×

வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்த அமெரிக்க மாப்பிள்ளை சென்னையில் கைது

சென்னை: ராயப்பேட்டை துரைசாமி காலனி பெருமாள் தெருவை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ(29). இவர் அண்ணாசாலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், “மேட்ரிமோனி மூலம் எனது பெற்றோர் எனக்கு மாப்பிள்ளை பார்த்தனர். அப்போது விழுப்புரம் முத்தையா நகரை சேர்ந்த வசந்தன்(33) என்பவரை கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்தேன். வசந்தன் அமெரிக்காவில் இன்ஜினியராக வேலை செய்து வந்ததால் அவர்கள் கேட்ட வரதட்சணை அனைத்தும் எனது பெற்றோர் கொடுத்தனர். பிறகு நான் கணவருடன் அமெரிக்காவிற்கு சென்று விட்டேன். அப்போது மீண்டும் அதிகளவில் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்தார். இதனால் இருவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. பின்னர் நான் சென்னை வந்துவிட்டேன். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வசந்தன் மீது வழக்கு பதிவு செய்துஅமெரிக்காவில் இருந்து சென்னை வந்த வசந்தனை நேற்று முன்தினம் நள்ளிரவு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்த அமெரிக்க மாப்பிள்ளை சென்னையில் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Jayashree ,Perumal Street ,Duraisamy Colony ,Rayapetta ,Annasalai All Women Police Station ,
× RELATED பச்சிளம் குழந்தை கொன்று வீச்சு