×

முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனத்தில் பல்லாங்குழி சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

முத்துப்பேட்டை, பிப்.13: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் கிராமத்தில் வேதாரண்யம் சாலையிலிருந்து குடிநீர் டேங்க்  வழியாக அரசு மருத்துவமனை, ஊராட்சி மன்ற அலுவலகத்தை கடந்து கடைதெரு செல்லும் சாலையானது சுமார் 2கிமீ தார்சாலையாகும். இந்த சாலை இப்பகுதி மக்களுக்கு மட்டுமின்றி தொண்டியக்காடு மற்றும் அதன் சுற்றுபகுதியை  சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு முக்கிய சாலையாகும்.
இந்த வழியாகத்தான் பொதுமக்கள் மாணவ, மாணவிகள் அதிகளவில் சென்று வருகின்றனர். தற்பொழுது சாலை சேதமாகி குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இப்பகுதியில் மக்கள் செல்லவும், வாகனங்கள் சென்று வரவும் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.  
இதனால் இந்த சாலையை சீரமைத்து தரவேண்டும்  என இப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் கண்டுக்கொள்ள வில்லை. இப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன்கருதி உடன் சீரமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Pattonavattu ,Pallangunai Road ,
× RELATED மின் உதவி பொறியாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மனு